×

சாலை பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்

 

ஊட்டி, பிப். 14: சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் ஊட்டியில் நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில மையம் செயற்குழு முடிவின்படி கோட்ட பொறியாளர் மூலமாக வாழ்வாதார கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நீலகிரி கோட்டத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் கனகரத்தினம், துணைச்செயலாளர் மற்றும் உட்கோட்ட நிர்வாகிகள் வட்டக் கிளை நிர்வாகிகள் சாலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குந்தா பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவினை நீலகிரி கோட்ட பொறியாளர் குழந்தைராஜிடம், சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

The post சாலை பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Road Workers Livelihood Demand ,Ooty ,State Central Working Committee ,Tamil Nadu Highway Department Road Workers Association ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...